முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை நீக்குவதற்கு தாமே உத்தரவிட்டதாக, சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

297

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை நீக்குவதற்கு தாமே உத்தரவிட்டதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி விசேட அதிரடிப்படை பாதுகாப்பை பெற்றுக் கொண்ட சுமந்திரன், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே அவருக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

உண்மையாகவே சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்திருந்தால், அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கமாட்டார்.

இருப்பினும் சுமந்திரனுக்கு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுவது போல , காவல்துறையினரின் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் சரத் வீரசேகர மேலும்  தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *