சிறிலங்காவில் வரும் வியாழக்கிழமை, பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கப்படவுள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச களுத்துறையில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் கொடையாக வழங்கும் கொரோனா தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி, வரும் புதன்கிழமை நாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுநாள் வியாழக்கிழமையே, சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கப்படுடும் என்றும், சிறிலங்கா ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டிற்குத் தேவையான கொரோனா தடுப்பு மருந்துகளை விரைவாக கொண்டு வருவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.