விவசாயிகளை தூண்டி விடும் வகையில் செயற்பட்ட 250 கீச்சக கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியரசு தினத்தன்று நடைபெற்ற உழவு இயந்திரப் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தின.
அதேபோன்ற வன்முறை சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க எல்லைப் பகுதியில் அதிக அளவில் காவல்துறையிரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.