முக்கிய செய்திகள்

வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தேசிய அடையாள அட்டை இலக்க முறை அறிவிப்பு

239

வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் நாள் முதல் கடுமையான முறையில் அமுலாக்கப்படும் என்று சிறிலங்கா  காவல்றை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமையவே, வீடுகளில் இருந்து வெளியேற வேண்டும்.

அதற்கமைய தமது அன்றாட செயற்பாடுகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

அடையாள அட்டையின் இறுதி இலக்க முறைமை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை அமுலில் இருக்கும்.

அதற்கு மாறாக வீடுகளிலிருந்து வெளியே செல்பவர்கள் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *