பறவை காய்ச்சலை, கேரளா அரசு மாநில பேரிடராக பிரகடனம் செய்துள்ளது.
கேரளா மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில், பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வாத்து பண்ணையில் சுமார் 1700 வாத்துகள் பறவைக்காய்ச்சல் நோயினால் இறந்துள்ளன.
குட்டுநாடில் மட்டும் 34 பறவைகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது..
இதற்கிடையில் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர், கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றை விற்பனை செய்வதற்கு தடைவிதித்துள்ளார்.