20 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரித்து விநியோகிக்க, இந்திய மருந்து நிறுவனத்துடன் ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தானது 91.6 சதவீதம் பயனளிப்பதாகவும், அனைத்து வயது மக்களிடமும் நிலையான மற்றும் வலுவான பாதுகாப்பை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசி, தற்போது 50 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ரஷ்ய நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதற்கமைய 10 கோடி மக்களுக்கு போடக் கூடிய வகையில், 20 கோடி மருந்துகள் தயாரிக்கப்படவுள்ளன.