முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அசாத் சாலி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் வரை தடுப்பு

299

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு மற்றும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றத்திடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் அனுமதி கோரியிருந்த நிலையில், நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *