முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அதிகபட்ச சிறைச்சாலை அமைப்பது குறித்து சிறிலங்கா- சீனா பேச்சு

177

அதிகபட்ச பாதுகாப்புடன் கூடிய சிறைச்சாலையை அமைப்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் சீனாவுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது..

வெலிக்கடைச் சிறைச்சாலையை புதிய இடத்துக்கு மாற்றும் வகையில் புதிய சிறைச்சாலை ஒன்றை அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளுடன் அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

புதிய சிறைச்சாலை எல்லா வசதிகளையும் கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ள அவர், இதற்கென நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 250 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சிறைச்சாலை விளக்கமறியல் வசதி, புனர்வாழ்வு வசதி, தொழிற்பயிற்சி வசதி,விளையாட்டு வசதிகளைக் கொண்டதாக இருக்கும் என்றும், அமைச்சர் ரத்வத்த குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிறைச்சாலையை அமைப்பது குறித்து சீனாவுடன் பேசி வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *