கொரோனா காரணமாக, சுகாதார சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகளால் தெற்காசியாவில் சுமார் 2இலட்சத்து 28ஆயிரம் சிறார்கள் இறந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம். ஆப்கானிஸ்தான் ஆகிய 6 நாடுகள் குறித்து இந்த அறிக்கை கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகளில் கொரோனா காரணமாக ஏற்பட்ட இடையூறுகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள், சிறார்கள் மற்றும் பதின்மர் பருவத்தினர் உள்ளர் என ஐ.நா.வின் யுனிசெப் (Unicef) அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.