முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அதிகாரப் பரவலாக்க கோட்பாட்டை ஆதரிப்பதாக சுந்திரக்கட்சி அறிவிப்பு

294

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பின் ஊடாக ‘அதிகார பரவலாக்க கோட்பாட்டை’ தாம் ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு வரைவுக்கான ஆலோசனைகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சமர்ப்பித்துள்ளது.

அதிகார பரவலாக்கத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு மேலதிகமாக மாவட்ட சபை மற்றும் முன்னர் இருந்த செனட் சபை முறைகளையும் தாம் பரிந்துரைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர், அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உறுப்பினர்களையும் துறைசார் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி மேற்படி சபைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தேர்தல்களில் விருப்பு வாக்கு முறையும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று தாம் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *