அதிமுக கூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கட்சி பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஆலோசனை கூட்டத்தில், பேசிய பிரேமலதா விஜயகாந்த், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நாளை முக்கிய முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும், மாநில நிர்வாகிகள் 234 தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 320 பேர் கலந்து கொண்டனர்.