முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அனைத்துக் கட்சிகளின் ராஜ்யசபா தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் 31 ஆம் திகதி

203

அனைத்துக் கட்சிகளின் ராஜ்யசபா தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நாடாளுமன்ற வரவு செலவு கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன் நடைபெறுகிற வழக்கமான கூட்டமாகும்.

நாடாளுமன்ற வரவு செலவு கூட்டத்தொடர் வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகிறது. இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்திலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெப்ரவரி, முதலாம் திதகி வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து பெப்ரவரி 15 வரை முதற்கட்ட கூட்டத்தொடர் நடைபெறும்.

பின் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு இரண்டாம் கட்டமாக மார்ச்  8 முதல் ஒரு மாத காலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *