இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா ஆயிரத்து 400 டொலர் உதவித் தொகை வழங்கும் பணி ஆரம்பிக்கப்படும் என்று, ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்க பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவு அமெரிக்கர்கள் வேலையிழக்கும் சூழலும் ஏற்பட்டது.
இந்தநிலையில் பொருளாதாரத்தை மீட்க 1.9 இலட்சம் கோடி அமெரிக்க டொலரைச் செலவிடுவதற்காக ஜோ பைடன் கொண்டு வந்த கொரோனா நிவாரண சட்டம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம், 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன் பெறும் என்றும், திட்டத்தின் மூலம் விரைவில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் செயற்படுத்தப்படும் என்றும் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.