முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அமெரிக்காவின் தடை விலக்கு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது

589

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கும்படி ஐரோப்பிய ஒன்றியம் வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள புதிய வர்த்தகத் தடைகளால் பல நூறு கோடி டொலர் மதிப்புள்ள வணிகம் பாதிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அஞ்சுகிற நிலையில், அமெரிக்கா இந்த நிராகரிப்பை தெரிவித்து்ளளது.

ஈரான் மீது அதிகபட்ச அழுத்தத்தை செலுத்த அமெரிக்கா விரும்புவதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை நிராகரிப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு நன்மை பயக்கும் என்றால் மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக நிதிசார்ந்த அழுத்தத்தை ஈரான் அரசுக்கு எதிராக உருவாக்க விரும்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கருவூலச் செயலாளர் ஸ்டீவன் நுசின் என்பவரும் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக என்.பி.சி. நியூஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

மிகக் குறிப்பான தருணங்களைத் தவிர ஏனைய நேரத்தில் தனது ஈரான் கொள்கையில் விதிவிலக்குகளை அளிக்கும் நிலையில் அமெரிக்கா இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஈரானுடன் உலக வல்லரசுகள் செய்துகொண்ட அந்த அணு ஒப்பந்தத்துக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் ஈரானுடன் வணிகம் செய்ய ஆர்வம் காட்டிய நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த மே மாதம் அமெரிக்கா விலகியபோதிலும் பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் தொடர்கின்றன.

எனினும் அவ்வாறு 2015ம் ஆண்டு கையெழுத்தான ஈரான் அணுத் திட்டம் தொடர்பான அனைத்துலக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த மே மாதம் விலகிய பின்னர், 2015ஆம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு முன்னிருந்த நிலைமை போன்று கடுமையான தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *