அமெரிக்காவின் நியூஜேர்சி மாநிலத்தில் எடனோ வைரஸ் தாக்கத்தினால் ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நியூஜேர்சியின் ஹஸ்கெல் நகரத்திலுள்ள சீர்திருத்த மையமொன்றில் வசிக்கும் குழந்தைகள் மத்தியில் எடனோ வைரஸ் பரவியுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வைரஸ் தாக்கத்தினால் ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை, மேலும் 12 சிறுவர்கள் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஜேர்சி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
எடனோ வைரஸானது, சிறுவர்களையே அதிகமாகத் தாக்குவதுடன் இலேசான காய்ச்சலும் தடிமனும் வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகளென தெரிவிக்கப்படுகின்றது.
வைரஸ் நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையில் ஏனைய நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லையென குறித்த வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.