அமெரிக்காவின் பசுபிக் விமானப்படைகளின் தளபதி ஜெனரல் கென்னத் வில்ஸ்பச் (Kenneth Wilsbach) தலைமையிலான அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சிறிலங்கா விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்கவே, அமெரிக்காவின் பசுபிக் விமானப்படைகளின் தளபதி ஜெனரல் கென்னத் வில்ஸ்பச் கொழும்புக்குச் சென்றுள்ளார்.
அவர் நேற்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை, பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அக்கறையுள்ள விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசுபிக் விமானப்படைகளின் தளபதி ஜெனரல் கென்னத் வில்ஸ்பச் தலைமையிலான அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் குழு, இந்தியாவில் முக்கிய சந்திப்புகளை மேற்கொண்ட பின்னரே கொழும்புக்குச் சென்றுள்ளது.