அமெரிக்காவில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டட முற்றுகைக்கு உலக நாடுகள் பல கண்டனம் வெளியிட்டு வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்பதிவில், அமெரிக்க நாடாளுமன்ற கட்டட முற்றுகை மற்றும் வன்முறை கண்டனத்திற்குரியது. சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது. முறையான மற்றும் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.