அமெரிக்காவில் அரசுப்பணிகளுக்கான செலவீன சட்டமூலம் நாடாளுமன்றின் இரண்டு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, சில மணிநேர அரசுப் பணி நிறுத்தப்ம் முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவினப் பணிகளுக்கு நிதி ஒதுக்கும் சட்டமூலத்தினை நிறைவேறுவதற்கான காலக்கெடு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.
இதனால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக அரசுப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
எனினும் அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் நேரம் கடந்து சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதுடன், அதன் பின்னர், 600 பக்கங்கள் கொண்ட சட்டமூலப் பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டு, அங்கு 240 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாகவும், 186 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் அதிபர் டிரம்ப்பின் கையெழுத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் அரச பணி முடக்கம் சில மணி நேரங்களிலேயே முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது