அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில், அமெரிக்க- ஈரான் உறவுகள் மோசமடைந்திருந்த நிலையில், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஈரானிடம் இருந்து சாதகமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர், ‘‘தோல்வியுற்ற டிரம்ப்பின் நிர்வாகக் கொள்கைகளைப் பயன்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விரும்பவில்லை.
அதனால் அமெரிக்காவுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா திரும்பி வருவதற்கான நேரம் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது.
அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்துவதற்கு ஈரான் தயாராக உள்ளது’’ என்று கூறியுள்ளார்.