அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி ஆகியோர் ஒருவரை ஒருவர் எச்சரித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஈரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் செய்துகொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் அறிவித்துள்ளதுடன், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளார்.
அத்துடன் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என்று தனது நேச நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ள அமெரிக்கா, ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது என்றும் நேரடியாக வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யாவிட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு மத்திய கிழக்காசிய துணைக்கண்டத்தில் உள்ள இதர 15 நாடுகள் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை ஈரான் தடுத்து நிறுத்தும் என்று ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி எச்சரித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்கா தங்களுடன் மோதும் நிலை ஏற்பட்டால் அது மிகப்பெரிய போராக மாறும் என்றும் என்றும் குறிப்பிட்டுள்ளதடன், அதிபர் டிரம்ப், சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடாக் கூடாது என்றும், இதனால் விளைவு மிக மோசமாக இருக்கும் என்றும் ஈரான் அதிபர் மேலும் எச்சரித்துள்ளார்.
இதேவேளை இதற்கு பதிலடியாக அமெரிக்காவை மீண்டும் மிரட்ட நினைத்தால் வரலாறு முழுக்க சில நாடுகள் அடைந்த வேதனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரான் அதிபரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
தமது கீச்சகப் பதிவில் இந்த எச்சரிக்கையை பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், வன்முறை மற்றும் மரணங்களை காட்டி நீங்கள் மிரட்டுவதை பொறுத்துக்கொள்ளும் நாடாக அமெரிக்கா இனி ஒருபோதும் இருக்காது என்றும், எச்சரிக்கையாக இருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.