அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற விதிக்கப்பட்ட தடையை, நீக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, மூன்றாம் பாலினத்தவர்கள் ராணுவத்தில் சேருவதற்கு அனுமதி அளித்திருந்தார்.
ஒபாமாவின் இந்த உத்தரவை, அடுத்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ரத்துச் செய்து உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டதுடன், ராணுவத்தில் புதிதாக மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கும் தடைவிதிக்கப்பட்டது.
இந்த தடையை நீக்கியுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்காவில் பிறந்த அனைத்து தகுதியுள்ள மக்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.