முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அம்பாறை பள்ளிவாசல் தாக்குதலின் சூத்திரதாரி சரத் வீரசேகரவே; அசாத்சாலி

381

அமைச்சர் சரத் வீரசேகரவே அம்பாறையில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரியாக இருந்தவர்,   என்று முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குற்றம்சாட்டியுள்ளார்.

2018ஆம் ஆண்டு அம்பாறையில் உள்ள பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி சரத் வீரசேகர தான் என்றும் அது தொடர்பான ஒலிப்பதிவுகளை வெளியிடத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது பொதுமக்களிடையே தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால், இது தொடர்பான பதிவுகளை வெளியிட தாம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் வீரசேகர  நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால்,  அவரை ஒரு தீவிரவாதி என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்கள் தொடர்பாக சரத் வீரசேகா  அந்த ஒலிப்பதிவில் பேசியுள்ளார் என்றும் அதனை கேட்க விரும்பும் எவருக்கும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *