முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது- வீண் போகவில்லை

231

சிறிலங்கா தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டார்ரி தெரிவித்துள்ளார்.

லண்டனில் 16 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக காணொளியொன்றை வெளியிட்டு, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களை மிக உயர்ந்த மட்டத்துக்குக் கொண்டு செல்ல தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான சிறிலங்கா தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தான் பெருமை அடைவதாகவும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் அவர்கள் தன்னுடன் அடிக்கடி பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகையின் உண்ணாவிரதம் கவனிக்கப்படாது- வீண் போகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *