முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அருளம்பலம் துஷ்யந்தனின் கொலைக்கு நீதி கோரி கடையடைப்பு

221

கிளிநொச்சி – வட்டக்கச்சிப் பகுதியில் கடந்த 10ம் திகதி இடம்பெற்ற அருளம்பலம் துஷ்யந்தனின் கொலைக்கு நீதி கோரியும், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினரை சிறிலங்கா காவல்துறையினர் தாக்கியதை கண்டித்தும், இன்று கடையடைப்பும், பேரணியும் இடம்பெற்றுள்ளன.

வட்டக்கச்சி பிரதேசத்தில் பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், வட்டக்கச்சி சந்தியிலிருந்து இன்று காலை உழவு இயந்திரங்களில் சென்ற மக்கள், காக்கா கடைச் சந்தியில் இருந்து, மாவட்டச் செயலகம் வரை பேரணியை முன்னெடுத்தனர்.

தமது பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மது விற்பனை மற்றும் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துமாறும் இதன்போது மக்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *