முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அலைபேசி இணைய சேவை மீதான தடை நாளை வரை

221

விவசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் அலைபேசி இணைய சேவை மீதான தடை நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 26-ஆம் நாள் பாரிய பேரணி  நடத்திய போது வன்முறைகள் ஏற்பட்டிருந்தன.

இதனால் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்துவதை தடுக்க காவல்துறையினர்  குவிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகளே அதிகளவில் குவிந்துள்ளதால், ஹரியானா மாநிலத்தில் வன்முறைகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அலைபேசி இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

14 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இந்த தடை நாளை மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *