நான்கு நாட்கள் பயணமாக ஈராக் சென்றுள்ள பாப்பரசர் பிரான்சிஸ் வடக்கு ஈராக்கில், ஐஎஸ் அமைப்பின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட மொசல் நகரைச் சென்றடைந்துள்ளார்.
அவர் நேற்று ஈராக்கில் உள்ள ஷியா முஸ்லிம்களின் ஆன்மீகத் தலைவரான ஆயதுல்லா அலி சிஸ்தானியைச் (Ayatollah Ali l-Sistani ) சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில், இன்று மொசூல் நகருக்குச் சென்றள்ள பாப்பரசர், போரின் போதும், ஐஎஸ் பயங்கரவாதிகளாலும் அழிக்கப்பட்ட தேவாலயங்களில் பாப்பரசர் ஆராதனைகளை நடத்தி வருகிறார்.
இதனையடுத்து, இர்பில் (Irbil) நகரில் சுமார் 10 ஆயிரம் கத்தோலிக்கர்கள் பங்கேற்கும் பிரார்த்தனையிலும் பாப்பரசர் கலந்து கொள்ளவுள்ளார்.