ஒன்ராறியோ மாகாண அரசாங்கம், கொரோனா வைரசுக்கு எதிரான, அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) தடுப்பூசியை செலுத்தும் முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.
முதற்கட்டமாக அடுத்த வாரம், ரொறன்ரோ, வின்ட்சர் எசெக்ஸ் (Windsor-Essex), கிங்ஸ்டன் (Kingston) ஆகிய பகுதிகளில் உள்ள சில மருந்தகங்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) தடுப்பு மருந்துகள், கனடாவுக்கு வந்து கொண்டிருப்பதாக, ஒன்ராறியோ சுகாதார அமைச்சர் கிறிஸ்ரின் எலியட் (Christine Elliott) தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்பான தெளிவான திட்டங்களை அவர் வெளியிடவில்லை.
அதேவேளை, கோடைகால இறுதிக்குள் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று நம்புவதாகவும் கிறிஸ்ரின் எலியட் (Christine Elliott) மேலும் கூறியுள்ளார்.