முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அ.தி.மு.கவை மீட்பதற்கான சட்டப் போராட்டத்தை சசிகலா நடத்துவார்

240

அ.தி.மு.கவை மீட்பதற்கான சட்டப் போராட்டத்தை சசிகலா நடத்துவார் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சசிகலா வரும் ஏழாம் தேதி காலை 9 மணிக்கு சென்னையை நோக்கி புறப்பட்டு வருகிறார்.

தமிழக எல்லையிலிருந்து தி.நகர் வீடு வரை அவரை வரவேற்க தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். யாருக்கும் சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அவர் விடுதலையாகிறார் என்றவுடன் பல வேதியியல் மாற்றங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்றன.

அவசர அவசரமாகத் திறக்கப்பட்டு, அவர் வந்துவிடுவார் என்று தெரிந்தவுடன் அவசர அவசரமாக நினைவகம் மூடப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தீர்ப்பு வழங்குவார்கள்” என்றும் தினகரன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *