இறுதிப்போரின் போது, சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கை, மே 17ஆம் நாள் வரை ஒத்திவைத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.
சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள், முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள், மீதான விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், எஞ்சிய 7 பேரின் மனுக்கள் மீதான விசாரணை, முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன.
இந்த வழக்கு, விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்குதொடுநர்களும் அவர்கள் சார்பான சட்டத்தரணிகள் எவரும் வருகை தராத காரணத்தால், குறித்த வழக்கு மீதான விசாரணை, மே மாதம் 17 நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.