சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ், இது தொடர்பாக கீச்சகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “உரிமைகளை மதித்தல், கடந்த காலம் தொடர்பாக சிறிலங்கா எடுக்கும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளைப் பொறுத்தே அதன் எதிர்காலம் அமைந்திருக்கும்.” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை தொடர்பாகவே அவர் இந்தப் பதிவை இட்டுள்ளார்.