முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஆப்கானிஸ்தானில் இராணுவ தளம் மீது நடத்தப்பட்ட மகிழுந்து குண்டுத் தாக்குதல்

181

ஆப்கானிஸ்தானில் இராணுவ தளம் மீது நடத்தப்பட்ட  மகிழுந்து குண்டுத் தாக்குதலில் 14 அரசுப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஷிர்சாத் (Shirzad) மாவட்டத்தில் உள்ள இராணுவத் தளம் மீது இன்று அதிகாலை 5.30 மணியளவில், மகிழுந்து குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் 14 அரசுப்படையினர் கொல்லப்பட்டனர் என்றும், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான் அமைப்பின் பேச்சாளர் ஒருவர்,  50 அரச படையினர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர் என்று, கூறியுள்ளார்.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தொடர்ந்தால், அமெரிக்கப் படைகளை விலக்கும் நடவடிக்கைகள் தாமதமடையும் என்று அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தலிபான் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *