ஆர்டிக் பிராந்தியம் தொடர்பில் அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆர்டிக் பேரவை மாநாடு பின்லாந்தில் நடைபெற்ற போது அமெரிக்கா மாறுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் குறித்து பேரவையின் ஏனைய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
எனினும், ஆர்டிக் பனிப்பாறைகள் உருகுதல் நன்மையானது எனவும், பொருளாதார ரீதியில் நலன்களை அதிகரித்துக் கொள்ள முடியும் எனவும் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
ஆசியாவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான பயண தூரம் இருபது நாட்களினால் குறைவடையும் என்ஞ அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், காலநிலை மாற்றத்தினால் இவ்வாறு பனிப் பாறைகள் உருகுதல் பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தும் என ஏனைய தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாநாட்டின் இறுதியில் பொதுவாக அனைத்து உறுப்பு நாடுகளும் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிடுவது வழமையானது எனினும், அமெரிக்காவின் மாறுபட்ட நிலைப்பாடு காரணமாக இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை.