கொரோனா தடுப்பூசியின் முதல் மருந்தளவைச் செலுத்துவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதாக ஆல்போர்ட்டா முதல்வர் ஜேசன் கெனி (Jason Kenney) தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முதல் மருந்தளவைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது மருந்தளவைச் செலுத்துவது உடனடியாகச் சாத்தியமில்லாது போயுள்ளது.
இதனால் குழப்பகரமான நிலைமைகள் மாகாணம் முழுவதும் ஏற்படும் ஆபத்துக்களும் உள்ளன.
ஆகவே உடன் அமுலுக்கு வரும் வகையில் முதலாவது மருந்தளவை செலுத்தும் செயற்பாட்டை நிறுத்தியுள்ளதொடு ஏற்கனவே தடுப்பூசியை உள்ளெடுத்தவர்களுக்கு எஞ்சிய தொகையினைப் பயன்படுத்தி இரண்டாவது மருந்தளவை போடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.