முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இதுவரையான காலப்பகுதிக்குள் 5,286 பேருக்கு தடுப்பூசி

309

இந்தியாவில் இருந்து சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசி இதுவரையான காலப்பகுதிக்குள் ஐயாயிரத்து 286 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற முன்னணி ஊழியர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இதுவரை கொரோனா தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் மற்றும் பிற முன்னணி ஊழியர்களுக்கு இந்தத் தடுப்பூசி முதற்கட்டத்தில் வழங்கப்படும் என்றும் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *