இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யப்பானிற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரோக்கியோவில் நாளை நடைபெறவுள்ள இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வருடாந்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தமது இந்த யப்பான் பயணத்தை தொடங்கும் முன்னராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவும், யப்பானும் ஒரு வெற்றி கூட்டணி என்று தெரிவித்துள்ளதுடன், யப்பான் இந்தியாவின் உண்மையான நட்புநாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யப்பானில் பிரதமர் நரேந்திர மோடி, யப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு நடாத்தவுள்ளார்.