சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பி செல்ல முற்பட்ட ஒருவரையும், அவரை அழைத்து சென்ற படகோட்டியையும் சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலையை சேர்ந்த துரைராசா இலட்சுமணன் என்ற நபர், இன்பருட்டியை சேர்ந்த புவனேஸ்வரன் என்ற படகோட்டியின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பி செல்ல முயன்ற போதே பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரையும் கடற்படையினர், மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சிறிலங்கா, இந்திய பணத்தாள்களும் இரண்டு அலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.