முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்தியா அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் 6ஆம் நாள் புதுடெல்லியில் நடைபெற உள்ளது

697

இந்தியா அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் நாள் புதுடெல்லியில் நடைபெற உள்ளது.

இதனை அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹீதர் நௌவேர்ட் இன்று அறிவித்துள்ளார்.

குறித்த இந்த பேச்சுக்கள் கடந்த யூலை மாதம் 6ஆம் நாள் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமெரிக்காவில் நடைபெற இருந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கெல் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டது.

எனினும் இறுதி நேரத்தில் இந்த சந்திப்பை காரணம் ஏதும் கூறாது அமெரிக்கா ஒத்திவைத்திருந்த நிலையிலேயே, தற்போது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் நாள் புதுடெல்லியில் அந்த பேச்சுக்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *