உயரதிகாரிகள் பேசுவது போன்று, இந்திய இராணுவ வீரர்களுக்கு பாகிஸ்தான் உளவாளிகள் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்துவதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் இராணுவ இரகசியங்களை தெரிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு தொலைபேசி, அலைபேசிகளில் உயரதிகாரிகள் பேசுவது போன்று பாகிஸ்தான் உளவாளிகள் தொடர்பு கொண்டு பேசுவதாக இந்திய இராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் தொலைபேசியில் அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யாமல், தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என இந்திய இராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், படைகள், முக்கிய நபர்களின் நடமாட்டங்கள் போன்ற தகவல்களை தொலைபேசி உரையாடல்களின் போது பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும், கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.