புதுடில்லியில் நடக்கவுள்ள குடியரசு தின அணிவகுப்பில், பங்களாதேஷ் இராணுவத்தினர் பங்கேற்க உள்ளனர்.
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் டில்லியில் நடக்கவுள்ள பிரம்மாண்ட விழாவில், முப்படைகளின் இராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக பங்களாதேஷ் இராணுவமும் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு குழுவாகவும், இராணுவ இசைக்குழுவினர் ஒரு குழுவாகவும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இது தொடர்பாக பங்களாதேஷ் இராணுவ குழுவுக்கு தலைமை ஏற்கும் இராணுவ அதிகாரி ஹைதர் சவுத்ரி கூறுகையில், இந்தியாவின் 72ஆவது குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்பது எங்களுக்கு கிடைத்த பெருமை. என்று குறிப்பிட்டுள்ளார்.