இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பெரியளவில் போர் உருவாகும் என்று அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் தேசிய புலனாய்வு சபை ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய போக்குகள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகின்ற நிலையில், அதன் பிந்திய அறிக்கை அண்மையில வெளியாகியுள்ளது.
கடந்த காலத்தைப் போல அல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“இந்தியாவும், பாகிஸ்தானும் போர் புரிய விருப்பம் இல்லாவிட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையே பெரியளவில் போர் உருவாகும்.
பதற்றம் மேலும் அதிகரித்தால் போர் மூளும் அபாயம் உள்ளது” என்றும், அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.