ஈரானின் புரட்சிகர காவல்படையினர் மேற்கொண்டுள்ள ஒத்திகையின் இரண்டவாது நாளான இன்று இந்துசமுத்திர பகுதிக்குள் நீண்ட தூர ஏவுகணையொன்று செலுத்தப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் மத்திய பாலைவன பகுதியில் ஈரான் இந்த ஒத்திகையை நடத்தியுள்ளது.
இந்த ஏவுகணைகள் ஆயிரத்து 800 கிலோமீற்றர் தூரம் செல்லக்கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.