இனவாதத்தை தூண்ட முயற்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை கண்டிப்பதாக சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இனவாத்தை தூண்டும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ளக்கூடின அல்ல என்றும், எல்லோரும் இணைந்து நாட்டை முன்னோக்கி நகர்த்த எழுந்து நிற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்களால் எவரேனும் அசௌகரியத்திற்கு உள்ளாகியிருப்பின், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ள மனோ கணேசன், அதனைவிடுத்து தொடர்ந்து இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு அரசியல் ரீதியாகவே பதிலளிக்கப்பட வேண்டும் என்றும், அதனை விடுத்து விக்னேஸ்வரனின் கருத்துக்களை சுட்டிக்காட்டி மேலும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.