தாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகவும் இனிமேல் தான் உண்மையான தர்மயுத்தம் நடக்கப் போகிறது என்றும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கியுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“சட்டமன்ற தேர்தலில் நான் ஒரு தொகுதியில் அல்ல, 2 தொகுதிகளில் நான் போட்டியிட இருக்கிறேன்.
தீய சக்தியையும், துரோக சக்தியையும் எதிர்த்து உன்மையான தர்மயுத்தம் இனிதான் தொடங்க உள்ளது.
மக்கள் எங்கள் பக்கம் இருப்பார்கள். இந்த தர்ம யுத்தத்துக்கு தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்.
எங்களது வேட்பாளர்களின் முதல் பட்டியலை புதன்கிழமை அறிவிப்பேன்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.