பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி, இன்று மலையகம் தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் மலையகத்தில் உள்ள பிரதான தொழிற்சங்கங்களும் ஏனைய துறையினரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தினால், இன்று காலை முதல் மலையகப் பகுதிகளில் அனைத்துச் செயற்பாடுகளும் முடங்கியுள்ளன.
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. பேருந்துப் போக்குவரத்தும் மலையக நகரங்களில் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து தோட்டப்பகுதிகளிலும் பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், எந்தவொரு தொழிற்சாலையும் இயங்கவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.