தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது.
தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இணைந்து இணைந்து வெளியிடுகின்றனர்.
ஏற்கனவே முன்னோட்டமாக அறிவித்த 2 திட்டங்களும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.