மகாராஷ்டிரா மாநிலம் – ரத்னகிரி, தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையில், இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரசாயன தொழிற்சாலையில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது, கொதிகலன் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.