கொரோனா வால் மரணக்கின்றவர்களின் சரீரங்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரணைதீவில் குறித்த சரீரங்களை புதைப்பதற்கு தொழில்நுட்ப குழு அனுமதியளித்திருந்த நிலையில் அதற்கு பல்வேறு தரப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்தநிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன் கடந்த தினம் இது குறித்து கலந்துரையாடியதாகவும் இதன்போது இரணைதீவில் கொரோனா வால் மரணக்கின்ற சரீரங்களை புதைப்பதற்கான தீர்மானம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இதனை உறுதிப்படுத்துவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்ட போதும் அந்த முயற்சி கைகூடவில்லை. அத்துடன் அரசாங்கத்தரப்பும் இதுகுறித்து உத்தியோக பூர்வமான அறிவிப்பினை வெளியிடவில்லை.