முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இரணைதீவு மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்

428

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இரணைதீவு பகுதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 ஆம் திகதி இரணை மாதா நகர் பகுதி மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்டனர்.

எனினும் தொடர்சியாக இரணைதீவு பகுதியில் சடலங்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பினருக்கும் எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவில்லை எனவும் இரணைதீவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *