வடக்கு ஒன்ராரியோவில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் பணியாற்றும் செஞ்சிலுவை சங்க ஊழியர்களுக்கு மேலதிகமாக இராணுவத்தினை பயன்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் காணப்படுகின்ற மோசமான பௌதீகச் சூழல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் இதுபற்றிய அடுத்த கட்டப்பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. மேலும், நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் பிறிதாக தனிமைப்படுத்துபப்பட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.