இறந்தவர்களின் ஆன்மாக்களை வைத்து வடக்கு, கிழக்கு மதகுருமாரும், தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் செய்வதாகவும், அதனை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும் என்றும், சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை சிறிலங்கா இராணுவத்தினர் இடித்தழித்தாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள அவர்,
“நினைவுச் சின்னம் சேதப்படுத்தப்பட்டதற்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சிறிலங்கா இராணுவத்தினர் மீது எழுந்தமானமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கமுடியாது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளதால் நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளதுடன் பயணக் கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்தநிலையில், இறந்தவர்களை அஞ்சலிக்க வேண்டும் என்றால் வீடுகளில் இருந்து அஞ்சலியுங்கள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.